Friday, June 17, 2011

தோழிக்கு ஒரு கடிதம் !!!

என் இனிய தோழியே ! நீ என்
இல்லம் வராமலே இருந்திருக்கலாம்!!!

உன் இனிய குரலால்
என்னை அழையாமலே இருந்திருக்கலாம்!!!

அரைமணி, ஒருமணி என்று
உன்னுடன் அமர்த்தாமல் இருந்திருக்கலாம்!!!

என் கண்ணீர், கவலை, கவிதை என்று
அத்தனையும் கேட்காமல் இருந்திருக்கலாம்!!!

என் கவலைகளின் உடனடி ஆறுதல்
என் களிப்புகளின் உடனடி பகிர்தல்
இவைகளை கொடுக்காமல் இருந்திருக்கலாம்!!!

உன்னை நெருங்கியதன் விளைவாய்
பார் எத்தனை பெரிய பிரிவு நமக்குள்!!!

இனிய குரல்களை என் செவிக்கு உணவாக்கிவிட்டு
இப்போது ஏன் ஊமையாகிப்போனாய்???
என்னை ஏன் ஊமையாக்கிப்போனாய்???

"கண்மூடித்தனமான அன்பு கண்ணைக் கெடுக்குமாம்"
இனி நாம் அளவாய் வைத்துக்கொள்வோம்

என் தோழி "தொலைபேசி" யே எல்லாம் நம் நட்பிற்காக!!!

Friday, July 2, 2010

மனமே சிறை ...



மனிதன்,
தன்னைத்தானே
தன்னிடமிருந்தே
விடுவித்துக்கொள்ளும்
நொடிவரையில்
விடுதலையின்
அர்த்தத்தை
உணரப்போவதில்லை

அகத்தூய்மை மட்டுமே
ஒரு மனிதனை
அழகாக்க முடியும்
அமைதியாக்க முடியும்

அகவிடுதலையை
விதைத்தால் மட்டுமே
இந்த உலகமிதில்
அறச்செடிகள் வளரக்கூடும்

இல்லையேல்,
இவ்வுலகம் கலவரம்
கண்டு கண்டே
காணாமல் போகும்

Saturday, June 20, 2009

சந்திக்கும் வேளைகளில்...



நாம் சந்திக்கும்
வேளைகளில்..
அளவாய் பேச
கற்றுக்கொள்!!!
கொஞ்சமாய்
அக்கரைக்காட்டு!!!
குறிப்பேடுகளில்
எழுதுவதற்கு
பக்கங்கள்
போதுவதில்லை!!!

Friday, June 12, 2009

நீ விடுவதில்லை


என் தனிமையிலும்
நீ என்னை
தனியே விடுவதில்லை
சிந்தைக்குள் வந்து
சிதைத்துவிட்டுத்தான்
செல்கிறாய்!!!

சந்திப்பு


நினைத்துக்கொள்வதென்பது
ஒரு வகை சந்திப்பாம்!!!
அப்படியென்றால்,
எந்த கணக்கில் சேர்ப்பது
நம் சந்திப்புகளை!!!
நான் சுவாசிக்கும் போதெல்லாம்
சிந்திக்கின்றேனே உன்னை!!!

Thursday, June 11, 2009

கடிதம்


எங்கிருந்து கிடைக்கிறது
வார்த்தைகள்
உனக்கு மட்டும்?!?!

உனக்கு மட்டுமே
சொந்தமான வார்த்தைகளில்
எனக்கு கடிதம்.

அதை படிக்கும்போதெல்லாம்
தோன்றுகிறது
நட்பு !!!
நமக்கு மட்டுமே
சொந்தம் என்று!!!

Sunday, May 31, 2009

சாகா வரம்



யாரிடம்
பெற்றுவந்ததோ
சாகா வரம்?
எப்பொழுதும்
துடிப்புடன்...
என் இதயத்தில்..
உன் நினைவுகள்!!!