என் இனிய தோழியே ! நீ என்
இல்லம் வராமலே இருந்திருக்கலாம்!!!
உன் இனிய குரலால்
என்னை அழையாமலே இருந்திருக்கலாம்!!!
அரைமணி, ஒருமணி என்று
உன்னுடன் அமர்த்தாமல் இருந்திருக்கலாம்!!!
என் கண்ணீர், கவலை, கவிதை என்று
அத்தனையும் கேட்காமல் இருந்திருக்கலாம்!!!
என் கவலைகளின் உடனடி ஆறுதல்
என் களிப்புகளின் உடனடி பகிர்தல்
இவைகளை கொடுக்காமல் இருந்திருக்கலாம்!!!
உன்னை நெருங்கியதன் விளைவாய்
பார் எத்தனை பெரிய பிரிவு நமக்குள்!!!
இனிய குரல்களை என் செவிக்கு உணவாக்கிவிட்டு
இப்போது ஏன் ஊமையாகிப்போனாய்???
என்னை ஏன் ஊமையாக்கிப்போனாய்???
"கண்மூடித்தனமான அன்பு கண்ணைக் கெடுக்குமாம்"
இனி நாம் அளவாய் வைத்துக்கொள்வோம்
என் தோழி "தொலைபேசி" யே எல்லாம் நம் நட்பிற்காக!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment