Saturday, June 20, 2009

சந்திக்கும் வேளைகளில்...



நாம் சந்திக்கும்
வேளைகளில்..
அளவாய் பேச
கற்றுக்கொள்!!!
கொஞ்சமாய்
அக்கரைக்காட்டு!!!
குறிப்பேடுகளில்
எழுதுவதற்கு
பக்கங்கள்
போதுவதில்லை!!!

Friday, June 12, 2009

நீ விடுவதில்லை


என் தனிமையிலும்
நீ என்னை
தனியே விடுவதில்லை
சிந்தைக்குள் வந்து
சிதைத்துவிட்டுத்தான்
செல்கிறாய்!!!

சந்திப்பு


நினைத்துக்கொள்வதென்பது
ஒரு வகை சந்திப்பாம்!!!
அப்படியென்றால்,
எந்த கணக்கில் சேர்ப்பது
நம் சந்திப்புகளை!!!
நான் சுவாசிக்கும் போதெல்லாம்
சிந்திக்கின்றேனே உன்னை!!!

Thursday, June 11, 2009

கடிதம்


எங்கிருந்து கிடைக்கிறது
வார்த்தைகள்
உனக்கு மட்டும்?!?!

உனக்கு மட்டுமே
சொந்தமான வார்த்தைகளில்
எனக்கு கடிதம்.

அதை படிக்கும்போதெல்லாம்
தோன்றுகிறது
நட்பு !!!
நமக்கு மட்டுமே
சொந்தம் என்று!!!