Sunday, April 19, 2009

கடைசியாய்...









என் முன்னுரையே
ஒ௫ முடிவுரையை
பற்றியது….

என் முதல்புள்ளியே
ஒ௫ முற்றுப்புள்ளியை
பற்றியது…

இவை கவிதைகள் அல்ல!!!
என் கண்ணீர் துளிகள்.
மடிந்து போன ஒ௫ உறவுக்காக
நான் மனதால் செலுத்திய
மலர் வளையங்கள் !!!
*
அண்ணா!
ஒரே ஒரு கவிதை
கேட்டேன்
கூற மறுத்தாய்

இதோ..
உனக்காக அடுக்கடுக்காய்
கவிதைகள்
ஆனால்,
கேட்கவும் மறுக்கிறாயே!
*
நினைவுகள்
ஓவ்வொன்றும்
சிறு தீப்பொறியாய்
என் மனசே
ஒரு எரிமலையாய்
ஏன் இறந்தாய்???
*
நீ
இறந்து போனதை..
மௌனமாய் உறங்கியதை..
கண் கூடாய்
பார்க்காதவரை

உறவே!
நீ உயிருடன் தான்
இருக்கிறாய்
என் உணர்வுகளுக்குள்..

*
உன் இழப்பிற்குப்ப்பின்
குழந்தைகள் விளையாடும்
விளையாட்டு வாகனங்களின்
பொய்யான விபத்துகளைக்கூட
ஜீரணிக்க முடியவில்லை
என் மனதால்..
*
இறந்தவன்
அமைதியாய்
உறங்குகிறான்

இருக்கிறவர்கள்
கதறி கதறி
அழுகிறார்கள்

அந்த சத்தத்திலாவது
அவன்
விழிக்க மாட்டானா???

No comments: