
மனிதன்,
தன்னைத்தானே
தன்னிடமிருந்தே
விடுவித்துக்கொள்ளும்
நொடிவரையில்
விடுதலையின்
அர்த்தத்தை
உணரப்போவதில்லை
அகத்தூய்மை மட்டுமே
ஒரு மனிதனை
அழகாக்க முடியும்
அமைதியாக்க முடியும்
அகவிடுதலையை
விதைத்தால் மட்டுமே
இந்த உலகமிதில்
அறச்செடிகள் வளரக்கூடும்
இல்லையேல்,
இவ்வுலகம் கலவரம்
கண்டு கண்டே
காணாமல் போகும்
No comments:
Post a Comment